யாழில் விபத்து! கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியின் மூத்த விரிவுரையாளர் சாவு!!


கோப்பாயில் இடம்பெற்ற விபத்தில் யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரி விரிவுரையாளர் உயிரிழந்துள்ளார்.

கோப்பாய் கிருஷ்ணன் கோவில் சந்தியில் இன்று இரவு 7 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் மூத்த விரிவுரையாளர் கனகசபை பாஸ்கரன் என்பவரே உயரிழந்தார்.

கரவெட்டியில் உள்ள வீட்டிலிருந்து இரவு மோட்டார் சைக்கிளில் கல்வியியல் கல்லூரியில் நடைபெறவிருந்த நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்வதற்காக வருகை தந்தபோது வீதியில் வெளிச்சம் இன்றி நிறுத்தப்பட்டிருந்த உழவு இயந்திர பெட்டியுடன் மோதி விபத்து இடம்பெற்றது என்று தெரிவிக்கப்பட்டது.
Previous Post Next Post