யாழ்.கிறீன் கிராஸ் விடுதியின் நீச்சல் தடாகத்தில் சடலமாக மிதக்கும் இளைஞன்! (படங்கள்)


யாழ்.நகரில் உள்ள கிறீன் கிராஸ் தனியார் விடுதியின் நீச்சல் தடாகத்தில் இருந்து இளைஞர் ஒருவருடைய சடலம் மீட்கப்பட்டுள்ளது.

நகர் பகுதியை சேர்ந்த 6 பேர் தனியார் விடுதியில் நேற்றிரவு தங்கியிருந்து இரவு 1 மணியின் பின்னர் நீச்சல் தடாகத்தில் நீராட சென்றிருந்தார்கள் என தெரிவிக்கப்படுகிறது.

இன்று காலை விடுதி நிர்வாகத்தினர் நீச்சல் தடாகத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்த நிலையில் மிதப்பதை அவதானித்து குறித்த விடயம் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்திருந்த நிலையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்கள்

எனினும் உயிரிழந்தவருடன் மேலும் பலர் நீராடி இருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் கொலையா அல்லது இயற்கை இறப்பா என்பது தொடர்பில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Previous Post Next Post