யாழில் ரயில் மோதி இளைஞன் உயிரிழப்பு! புகையிரதத்தை மறித்து மக்கள் போராட்டம்!! (படங்கள்)

அரியாலை நாவலடியில் பாதுகாப்பற்ற ரயில் கடவையை மோட்டார் சைக்கிளில் கடக்க முயன்ற இளைஞன் தொடருந்துடன் மோதுண்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்றது. யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த கடுகதி தொடருந்துடனேயே விபத்து இடம்பெற்றது.

அல்லைப்பிட்டியை சேர்ந்த ம.அரவிந்தன் (வயது- 28 ) என்பவரே உயிரிழந்தார்.

சம்பவத்தையடுத்து அங்கு கூடிய கிராம மக்கள் தொடருந்தை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Previous Post Next Post