யாழ். பேருந்து நிலையத்தில் உயிரிழந்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு!

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு மீட்கப்பட்ட சடலம் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சடலம் மீதான மரண விசாரணை, திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேமகுமாரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சடலத்தை உரியவர்கள் அடையாளம் காட்டுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பெண்ணின் சடலம் 4 அடி 5 அங்குலம் உயரமுடைய தோற்றத்துடன், பச்சை நிற சேலை அணிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post