சூரன் போரில் நடந்த வாள்வெட்டு! இருவர் வைத்தியசாலையில் அனுமதி!! யாழில் சம்பவம்

யாழ்.சங்கரத்தை பகுதியில் உள்ள பங்குரு முருகன் கோவிலில் நேற்றைய தினம் சூரன் போரில் இடம்பெற்ற வாய்த்தர்க்கம் வாள்வெட்டில் முடிந்த நிலையில் இரு இளைஞர்கள் வாள்வெட்டுக்கு இலக்காகி காயமடைந்துள்ளனர்.

வட்டுக்கோட்டை கிழக்கு சித்தங்கேணியை சேர்ந்த நவரத்தினராசா ஜனந்தன் (வயது 33) மற்றும் வட்டுக்கோட்டை மேற்கை சேர்ந்த கிருஷ்ணகுமார் கஜானந்தன் (வயது 38) ஆகிய இருவருமே காயமடைந்துள்ளனர்.

சங்கரத்தை பங்குருமுருகன் ஆலயத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை சூரன் போர் திருவிழா இடம்பெற்றது. அதன் போது, ஆலயத்தில் இரு இளைஞர் குழுக்களுக்கு இடையில் தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

தர்க்கம் கைகலப்பாகமாறி வாள் வெட்டில் முடிவடைந்தது. சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Previous Post Next Post