![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEitClpFniMjdB6AwpRT7YNkUk2gYU4-NsBfHNFsRmQ-rKRN1tS9ZXDDrL2Q0HYlDyNU1jO7_bwEUPZqNwC-js9VSUSMYjzbPcTCtJxW5XUPjlum7Cka6nMCQzb9bQy4NcQMHNS6mb-07V8m4i7GhYBKL5J6TKW_8WJ8_wzjMRDswxKTZDxsx3N02VaKFqY/s16000/rain17-e1692137225520.jpg)
ஓகஸ்ட் 13ஆம் திகதி இரவு 10.30 மணியளவில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட மாங்குளம் பொலிஸார் குறித்த பெண்ணையும் தாக்குதலில் ஈடுபட்ட நபரையும் கைது செய்தனர்.
தாக்கப்பட்ட நபருக்கு வயது 48. இந்த நபர் திருமணமாகி பிள்ளைகள் இருப்பதாகவும் அவர் கனடாவில் சில காலமாக வேலை பார்த்து இரண்டு வருடங்களுக்கு முன்னர் நாட்டிற்கு வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கனடாவில் இருந்தபோது, மாங்குளம் பனிச்சங்குளத்தைச் சேர்ந்த 43 வயதுடைய பெண் ஒருவருடன் குறித்த நபர் உறவு கொண்டுள்ளார். அந்தப் பெண்ணுக்கும் திருமணமாகி குழந்தைகள் இருப்பதாக பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த பெண் திடீரென இவருடனான உறவை நிறுத்தியதாகவும், அது தொடர்பில் அவரது வீட்டுக்குச் சென்று விசாரித்த போது, இந்த தடியடி இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸ் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த பெண்ணின் சகோதரர் உள்ளிட்ட நால்வர் கொண்ட குழுவே இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. பெண்ணின் சகோதரரும் ஏனைய குழுவினரும் தலைமறைவாகியுள்ளதாகவும், அவர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
தாக்குதலுக்கு உள்ளான நபர் பொலிஸில் முறைப்பாடு செய்ததுடன், 50,000 ரூபா, 300 கனேடிய டொலர்கள் மற்றும் தனது கையடக்கத் தொலைபேசியையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.