யாழில் விடுதியில் 26 வயது யுவதியைப் போதைக்கு அடிமையாக்கி கூட்டுப் பாலுறவு! 4 பேர் கைது!!

யாழ்ப்பாணத்தில் உள்ள விடுதியொன்றில் 26 வயதான இளம் யுவதி உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் யுவதியை போதைக்கு அடிமையாக்கி குறித்த மூன்று நபர்கள் கூட்டு பாலுறவு கொண்டுள்ளமை தெரியவந்துள்ளது.

போதைக்கு அடிமையான யுவதி யாழ் நகரில் சிறுவர்களை இலக்கு வைத்து ஜஸ் போதைக்கும் அடிமைப்படுத்தும் வலையமைப்பை தேடி சென்ற பொலிஸாரிடம் இவர்கள் சிக்கியுள்ளனர். குறித்த நான்கு பேரும் நேற்றையதினம் (08-09-2023) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதான 26 வயது யுவதி திருநெல்வேலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணி புரிகின்றார்.

யாழ் நகருக்கு அருமையில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருப்பதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து நேற்று குறித்த் விடுதியை பொலிஸார் முற்றுகையிட்டபோது அறையொன்றில் யுவதியும் ஆணொருவரும் தங்கி இருந்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் ரோல்கோட் நகைகளை விற்கும் கடை வைத்திருக்கும் முஸ்லிம் நபராவார். இவரே ஐஸ் போதைப் பொருளைப் பெண்ணுக்கு விநியோகித்துள்ளார். ஐஸ் போதைக்கு பெண்ணை அடிமையாக்கி, தங்கள் தேவைக்கு இந்தக் கும்பல் பயன்படுத்தியுள்ளது.

விடுதியை முற்றுக்கையிட்ட பொலிஸார்ஏனைய 2 ஆண்களும் அறைக்கு வெளியில் இருந்துள்ளனர். அவர்களிடமிருந்து ஜஸ் போதைப்பொருட்களும் கைப்பற்றப்படட்து. 26- 29 வயத்திற்கிடைப்படட 3 ஆண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் இயற்கைக்கு மாறான பாலுறவை கொண்டுள்ளமை விசாரனைகளிலும் மருத்துவ பரிசோதனைகளிலும் தெரியவந்துள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட 4 பேரும் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
Previous Post Next Post