
பிரான்ஸ் நாட்டில் இருந்து அதிக புலம் பெயர் அகதிகள் கடல் வழியாக லண்டன் சென்று குடியேறி வருகின்றனர்.
இந் நிலையில் சாவகச்சேரி கச்சாய் பகுதியைச் சேர்ந்த சண்முகராசா டினேஸ் (வயது 33) என்ற இளைஞர் லண்டன் செல்லும் நோக்கத்துடன் பயணித்த போது உயிரிழந்துள்ளார்.
சடலத்தை பெறுப்பேற்க உறவினர்கள் முயற்சி செய்து வருகின்றனர். குறித்த பயணம் மிகவும் ஆபத்து நிறைந்த பயணம் என்று தெரிவிக்கப்படுகின்றது.