அரச ஊழியரின் மோட்டார் சைக்கிள் விசமிகளால் எரிப்பு! (படங்கள்)

வவுனியா கனகராயன்குளம் பகுதியில் உள்ள அரசாங்க ஊழியாரின் மோட்டார் சைக்கிள் இனந்தெரியாத நபர்களினால் தீயிட்டுக் கொளுத்தப்பட்டுள்ளது.

குறித்த ஊழியரின் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளே இவ்வாறு தீயில் முற்றாக எரிந்துள்ளது.

வீட்டு உரிமையாளருடன் ஏற்பட்ட முரண்பாடுகளே இச் சம்பவத்துக்குக் காரணமாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகின்றது.




Previous Post Next Post