பாதுகாப்புக்கு இருவரை நியமித்து சிறுமியைத் துஷ்பிரயோகம் செய்த இளைஞன்!

வாசலில் இருவரைப் பாதுகாப்புக்கு நியமித்து வீட்டுக்குள் வைத்து சிறுமி ஒருவரை இளைஞன் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

வவுனியா – தாலிக்குளம் 8 ஆம் ஒழுங்கையில் உள்ள 15 வயதுச் சிறுமி ஒருவர் வழமையாக தனது உறவினரின் வீட்டுக்குச் சென்று கற்றல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றார்.

சம்பவ தினத்தன்று 10 ஆம் திகதி இரவு 7.30 மணியளவில் தனது கற்றல் செயற்பாடுகளை முடித்துக் கொண்டு வீடு திரும்பிய சிறுமியை அப் பகுதியில் உள்ள இளைஞன் அருகில் உள்ள வீடு ஒன்றுக்குள் அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

இதன்போது அவருடன் சென்ற இருவர் அவருக்கு பாதுகாப்புக்காக வெளியில் நின்றுள்ளனர். இந் நிலையில் குறித்த சிறுமியை பொலிஸார் அழைத்துச் சென்று விசாரணை நடத்தியுள்ளதுடன், மருத்துவ அறிக்கையும் பெற்றுக் கொண்டனர்.

இச் சம்பவத்துடன் தொடர்புபட்ட பிரதான 26 வயதுடைய நபர் தலைமறைவாகியுள்ள நிலையில் சம்பவம் இடம்பெற்ற போது பிரதான சந்தேக நபருடன் இருந்தாகத் தெரிவித்த இருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளனர்.

இந் நிலையில் தலைமறைவாகியுள்ள பிரதான சந்தேக நபரைக் கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். 

Previous Post Next Post