ஜனாதிபதியின் தீர்மானம்! யாழில் மாபெரும் போராட்டத்துக்கு அழைப்பு!!

அண்மைய நாட்களாக அதிகரித்து வரும் சட்டவிரோத மண் அகழ்வுக்கு எதிராக நாளை மறுதினம் புதன்கிழமை யாழ்.மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக முற்பகல் 10 மணிக்கு மாபெரும் கண்டனப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

புதிதாகப் பதவியேற்றுள்ள ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ, மணல் வழித்தட அனுமதியை இரத்துச் செய்துள்ளதைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்தின் தீவகம், அரியாலை, வடமராட்சி கிழக்கு உள்ளிட்ட பல இடங்களிலும் சட்டவிரோத மண் அகழ்வுகள் அதிகரித்துள்ளன.

அதேபோன்று வடக்கு மாகாணத்தின் ஏனைய மாவட்டங்களிலும் இந்தச் சட்டவிரோத மணல் அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதனால் பல பாதிப்புக்கள் ஏற்படுவதாகப் பல தரப்பினர்களும் தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டி வரும் நிலையில் இதனைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

இதற்கமைய நாளை மறுதினம் யாழ்.மத்திய பேருந்து நிலையத்தில் நடைபெறும் இந்தப் போராட்டத்தில் கட்சி வேறுபாடுகளைக் கடந்து அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Previous Post Next Post