தற்கொலையால் திணறுகிறது யாழ்.குடாநாடு! களத்தில் இறங்கினார் பெண் உறுப்பினர்!! (வீடியோ)

அண்மைக் காலமாக யாழ்ப்பாணத்தில் இளைய சமுதாயத்தின் தற்கொலைகள் அதிகரித்துக் காணப்படுகின்றது.

இந் நிலையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணித் தலைவியும், நல்லூர் பிரதேச சபையின் உறுப்பினருமான திருமதி வாசுகி சுதாகரன், மக்கள் மத்தியில் இது தொடர்பிலான விழிப்புணர்வு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.
அத்துடன் நல்லூர் பிரதேச சபையின் தற்காலிக உக்காத குப்பைகளின் சேமிப்பு மையம் தொடர்பாகவும் இதனுடன் சேர்த்து மக்களுக்கு அறிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் சனிக்கிழமை நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட திருநெல்வேலி ஒன்பதாம் வட்டாரப் பகுதியில் ஆரம்பமான குறித்த விழிப்புணர்வுச் செயற்பாடுகள் நேற்றும் இரண்டாவது நாளாக மேற்கொள்ளப்பட்டது.

குறித்த பெண் உறுப்பினர் தலைமையில் வீடு வீடாகச் சென்ற குழுவினர் இவ் விழிப்புணர்வு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.






Previous Post Next Post