![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh-YKFwpbvYRNpbtmtKWCxoPELW22gjIUaFpv-SKEJFdTYx8gdiBEP4Y3t5NRg_Dg1ljVV-lvXkv9cxfkmUNx8kjK7aX_gLIwGaIkBaaaJmNhI9ovP3t1QVhNoChLLWUaq4RNeKJrVZONK5EVGCaCfghbuXLNCtZ-WLU3KdCREQ_Nh3QUDs-wl1WXocsAg/s16000/680233b5f1f6d81b38ac11878e51d761_XL.jpg)
நெல்லியடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட பகுதியில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த இளைஞன் , வீட்டில் தனிமையில் இருந்த யுவதியை மிரட்டி , அவரிடம் இருந்த வங்கி அட்டையை திருடி சென்றுள்ளார்.
அது தொடர்பில் யுவதியினால் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. முறைப்பாட்டின் பிராகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த வேளை ,
திருடப்பட்ட வங்கி அட்டையை பயன்படுத்தி , பல்பொருள் அங்காடி ஒன்றில் இளைஞன் பொருட்களை கொள்வனவு செய்ததை அறிந்து , விசாரணைகளை முன்னெடுத்து இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.