சுதந்திரதினத்தன்று யாழ்.பல்கலையில் பறக்கும் கறுப்புக் கொடி! (வீடியோ)

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் முன்பாக கறுப்புக் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன. இலங்கையின் 72 ஆவது சுதந்திர தின நாளான இன்று இக் கறுப்புக் கொடிகள் பறக்கவிடப்பட்டதுடன், பதாகை ஒன்றும் கட்டப்பட்டுள்ளது.
போர்க் குற்றங்களுக்கு இலங்கை பொறுப்புக் கூறும் வகையில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையிலிருந்து ஐ.நா. பாதுகாப்புச் சபைக்கு மாற்றப்பட்டு அதன் ஊடாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்தல் வேண்டும்.

பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்படல் வேண்டும்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு உள்ளக விசாரணை மூலம் நீதி கிடைக்காது போன்ற வாசகங்கள் குறிப்பிடப்பட்டு பதாகை கட்டப்பட்டுள்ளது.

சுதந்திரதினத்தை கரிநாளாக அறிவித்து வடக்குக் கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் முன்னெடுக்கப்படும் போராட்டங்களுக்கு முழுமையான ஆதரவைத் தெரிவித்துக் கொள்வதுடன், அந்தப் போராட்டத்தில் அனைவரையும் கலந்து கொண்டு வலுச்சேர்க்குமாறும் யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தால் நேற்று அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post