கனடாவில் நள்ளிரவில் துப்பாக்கிச் சூடு! மூவர் உயிரிழப்பு!!

கனடாவில் இனந்தெரியாத நபர்களினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டுப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று இரவு ரொரன்றோ டவுன்டவுன் பகுதியில் 10.30 மணியளவில் இந்தத் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

அந்தப் பகுதியிலுள்ள தொடர் வீட்டு மனைத் தொகுதிக்குள் புகுந்தவர்களாலேயே இத் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது குறித்து தகவல் கிடைத்ததும் பொலிஸார் சம்பவ இடத்துக்கு சென்று காயமடைந்தவர்களை வைத்தியசாலைக்கு அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இந்தத் துப்பாக்கிச் சூடு, ஒரே கட்டட அறையில் இருந்து மேற்கொள்ளப்படவில்லை எனவும் இதற்காக பல கட்டடங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது என உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்தச் சம்பவத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் மற்றைய நபர் சிறிய காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் பொலிஸ் அதிகாரி குறிப்பிட்டார்.

இத் துப்பாக்கிச் சூட்டுக்கான காரணங்கள் எதுவும் இன்னமும் வெளியாகவில்லை என அவர் குறிப்பிட்டார். உயிரிழந்தவர்களின் விபரங்களும் இதுவரை வெளியாகவில்லை.


Previous Post Next Post