யாழ்.மாவட்டத்தில் மறு அறிவித்தல் வரும்வரை ஊரடங்குச் சட்டம்!

வடக்கு மாகாணத்தின் 5 மாவட்டங்களில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் மறு அறிவித்தல் வரை நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நிலவும் நிலையைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்று சுட்டிக்ககாட்டப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் நாளைக் காலை 6 மணிக்குத் ஊரடங்கு தளர்த்தப்படும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அந்த அறிவிப்பு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

வட மாகாணத்தின் வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் நடைமுறையில் உள்ள ஊரடங்கு சட்டம் நாளை, 27 காலை 06.00 மணிக்கு நீக்கப்படவிருந்தது.

எனினும் தற்போதைய நிலமையை கருத்திற் கொண்டு யாழ்ப்பாண மாவட்டத்திற்கு மட்டும் மறு அறிவித்தல் வரை அதனை நீடிப்பதற்கு அரசு தீர்மானித்துள்ளது.

எனினும் கிளிநொச்சி, மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் நாளை வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்குச் சட்டம் பிற்பகல் 2 மணிக்கு மீள நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ளூயசந
Previous Post Next Post