யாழில் பெண்ணுக்குத் தொலைபேசியில் பாலியல் தொல்லை! இளைஞர்களுக்கு நடந்த கதி!! (படங்கள்)

யாழ்ப்பாணத்தில் குடும்பப் பெண்ணொருவரிடம் தொலைபேசி வழியாக முறையற்ற விதமாக நடந்த இரண்டு இளைஞர்கள், பிரதேச மக்களால் நையப்புடைக்கப்பட்டுள்ளார்.  நேற்று (20) யாழ் புறநகர்ப் பகுதியொன்றில் இந்த சம்பவம் நடந்தது.

வட்டுக்கோட்டையை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் அந்தப் பகுதிக்கு அழைக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டனர். பின்னர் பொலிசாரிடம் அவர்கள் ஒப்படைக்கப்பட்டனர். வட்டுக்கோட்டையை சேர்ந்த இளைஞர்கள் இருவர் அறிமுகமற்ற தொலைபேசி இலக்கமொன்றிற்கு அழைப்பேற்படுத்தி பேசியுள்ளனர். மறுமுனையில் பேசிய இளம் குடும்பப் பெண்ணிடம் “ரேட் என்ன?“ என கேட்டுள்ளனர்.  இதனால் அந்தப் பெண் அதிர்ச்சியடைந்துள்ளார்.

வீட்டில் அவரது கணவரும் இருந்ததால் இதனை அவதானித்து, நடந்ததை வினவியுள்ளார். இதன்போது நடந்தவற்றை அந்தப் பெண் குறிப்பிட்டுள்ளார். அந்த இலக்கத்திற்கு மீள மனைவியை அழைப்பேற்படுத்த வைத்த கணவன், அவர்களை, யாழ் புறநகர்ப்பகுதியொன்றிற்கு வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து, நேற்று இரவு இரண்டு இளைஞர்கள் கார் ஒன்றில் குறிப்பிட்ட பகுதிக்கு சென்றிருக்கிறார்கள். அங்கு ஏற்கனவே, பெண்ணின் கணவனும், அந்தப் பகுதி இளைஞர்களும் காத்திருந்தனர்.

குறிப்பிட்ட பகுதிக்கு சென்ற இளைஞர்கள் இருவரும், பெண்ணிற்கு அழைப்பேற்படுத்தி தாம் காத்திருக்கும் விடயத்தை தெரிவித்துள்ளனர். குறிப்பிட்ட இடமொன்றிற்கு அவர்களை வருமாறு பெண் கூறியதையடுத்து இருவரும் அங்கு சென்றனர்.

அங்கு ஏற்கனவே காத்திருந்த இளைஞர்கள், காரில் வந்த இருவரையும் சுற்றிவளைத்து பிடித்து, கட்டி வைத்து நையப்புடைத்துள்ளனர். இதில் அவர்கள் கடுமையான காயமடைந்தனர்.

பின்னர் யாழ்ப்பாண பொலிசாரிடம் இளைஞர்கள் ஒப்படைக்கப்பட்டனர். இருவரையும் விசாரணை நடத்திய பொலிசார், இனிமேல் இப்படி நடக்கக்கூடாது என எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.


Previous Post Next Post