எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
இந்தத் தகவலை வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
சங்கானை பொதுச் சந்தையில் வியாபாரத்தில் ஈடுபடும் 100 வியாபாரிகளிடம் பெறப்பட்ட மாதிரிகளின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையிலேயே 8 பேருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்மூலம் மருதனார்மடம் கொரோனா வைரஸ் கொத்தணியின் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 66ஆக அதிகரித்துள்ளது.
இன்று அடையாளம் காணப்பட்டவர்களில் சங்கானை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த சங்கானையில் 4 பேரும் பண்டத்தரிப்பு, மானிப்பாய், வடலியடைப்பைச் சேர்ந்த தலா ஒருவரும் உடுவிலைச் சேர்ந்த ஒருவரும் அடங்குகின்றனர்.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துபீட ஆய்வுகூடத்தில் இன்று 100 பேரின் மாதிரிகள் பிசிஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன. அவற்றில் 8 பேருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஏனைய 92 பேருக்கு தொற்று இல்லை என்று அறிக்கை கிடைத்துள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் குறிப்பிட்டார்.
சங்கானை – 4 பேர்
உடுவில் – ஒருவர்
பண்டத்தரிப்பு – ஒருவர்
மானிப்பாய் – ஒருவர்
வடலியடைப்பு – ஒருவர்