யாழில் தனியார் காணியில் விகாரை! அடிக்கல் நாட்டினார் இராணுவத் தளபதி!! (படங்கள்)

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
வலி.வடக்கு தையிட்டியில் தனியார் காணியில் விகாரை அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று சமய வழபாடுகளுடன் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கண்டியில் உள்ள விகாரை போன்று 100 அடி உயரத்தில் காங்கேசன்துறை திஸ்ஸ விகாரை அமைக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவித்தன.

வலி.வடக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இந்த விகாரை அமைப்பதற்கு கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்ட நிலையில் நிரந்தக் கட்டடம் அமைக்க இடைக்காலத் தடை விதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
br />இந்த நிலையில் தையிட்டியில் திஸ்ஸ விகாரை அமைக்க இன்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவால் அடிக்கல் நடப்பட்டுள்ளது.

தையிட்டி பெண்கள் காவலரனுக்கு அருகாமையில் இந்த விகாரை தனியார் காணியில் அமைக்கப்படவுள்ளது.

அந்தக் காணி விகாரைக்குரிய காணி என சொல்லப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post