யாழில் சிறிதரன் எம்.பியின் மகன் மீது வீடு புகுந்து தாக்குதல்! (வீடியோ)

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் மூத்த மகன் மீது இனந்தெரியாத 8 பேர் கொண்ட குழுவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் அண்மையிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டிற்குள் வாள், கண்ணாடி போத்தல், இரும்புக் கம்பிகளுடன் நுழைந்த 4 மோட்டார் சைக்கிளில் வந்த 8பேர் கொண்ட குழு நாடாளுமன்ற உறுப்பினரின் மகன் மீது கடுமையான தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

அத்துடன் அவரது மோட்டார் சைக்கிளையும் சேதப்படுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளது. மர்மக்குழுவினர் அத்துமீறி நுழைந்து அடாவடியில் ஈடுபட்ட காட்சிகள் சி.சி.டிவி கேமராவில் பதிவாகியுள்ளன. இது தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.







Previous Post Next Post