யாழில் இளைஞன் மீது சரமாரி வாள்வெட்டு! ஒருவர் கைது!! (படங்கள்)

யாழ்.மிருசுவில் - கெற்பேலி பகுதியில் தோட்டத்திற்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த இளைஞன் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டிருக்கின்றது.

சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞன் சாவகச்சோி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இன்று காலை குறித்த இளைஞன் தோட்டத்திற்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த நிலையில் வழிமறித்த ஒருவர், இளைஞன் மீது சரமாரியாக வாள்வெட்டு தாக்குதல் நடத்திவிட்டு தப்பி சென்றிருக்கின்றார். 

இச் சம்பவத்தில் க.ததுர்சன்(வயது-25) என்ற இளைஞன் படுகாயமடைந்த நிலையில்  சாவகச்சோி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார். 

சம்பவம் தொடர்பாக கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன், சந்தேகத்தின் பேரில் ஒருவரை பொலிஸார்  கைது செய்துள்ளனர்.

Previous Post Next Post