யாழ்.வடமராட்சியில் அதிரடிப் படை துப்பாக்கிச் சூடு! இருவர் படுகாயம்!! (வீடியோ)


சிறப்பு அதிரடிப் படையினரின் துப்பாக்கிச் சூட்டில் சிக்கி படுகாயமடைந்த இருவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

வடமராட்சி கிழக்கு முள்ளி பகுதியில் இன்று காலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வாகனம் ஒன்றில் மணல் கடத்தலில் ஈடுபட முற்பட்ட போதே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்தி்ல் துன்னாலையைச் சேர்ந்த இருவர் படுகாயமடைந்தனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

ஒருவரின் காலில் துப்பாக்கி ரவை உள்ளதால் அவர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

படைத்தரப்பு விளக்கம்!

சட்டவிரோத மணல் கடத்தல் இடம்பெறுவதாக தகவல் வெளியாகிய நிலையில் அதனை தடுக்கும் நோக்கில் வீதியில் ஆணிகள் பொருத்தப்பட்ட தடைகள் ஏற்படுத்தப்பட்டு வாகனங்களை தடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

வாகனங்கள் குறித்த தடைகளையும் தாண்டியதுடன் தம் மீதும் மோதியதாகவும் அதன் பின்னரேயே துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்த மணல் ஏற்றிவந்தவர்களாக கருதப்படும் இருவரும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

காயமடைந்தவர்களின் உறவினர்கள் உட்பட்டவர்கள் பெருமளவில் வைத்தியசாலை வளாகத்தில் கூடியிருப்பதால் வன்முறைகள் ஏற்படலாம் என்பதால் பொலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
Previous Post Next Post