பிரான்ஸில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்குப் பிரான்ஸ் தமிழ்ச் சங்கம் இரங்கல்! (படங்கள்)


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
பிரான்ஸ் நுவாசி லூ செக் பகுதியில் இடம்பெற்ற படுகொலைச் சம்பவத்தில் உயிரிழந்த ஐந்து தமிழ் உறவுகளுக்கும் பிரான்ஸ் தமிழ்ச் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.

பிரான்ஸ் தமிழ்ச் சங்கத்தின் இரங்கல் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பிஞ்சுக் குழந்தைகளினதும், இளம் தாயினதும் இழப்புச் செய்தி அறிந்து அதிர்ச்சியடைந்து மீளாத் துயரத்தில் இருக்கும் அனைத்து உறவுகளுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

உயிரிழந்த உறவுகளின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்கின்றோம் என்றுள்ளது. 

இதேவேளை படுகொலை செய்யப்பட்ட உறவுகளை நினைவு கூர்ந்து இன்று(09.10.2020) மாலை 19h மணிக்கு அஞ்சலி_நிகழ்வு நடைபெற உள்ளது.

கடந்த சனிக்கிழமை (03/10/2020)அன்று நடந்த துயர சம்பவத்தில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளை நினைவு கூர்ந்து வணக்கம் செலுத்துவதற்கான கண்ணீர் வணக்க நிகழ்வு நுவாசி லு செக் தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில், நுவாசி லு செக் மாநகர சபை (Maire) École Bayard, École Quatremaire, collège René casson, Fédération de Basket ball ஆகியவற்றின் ஒழுங்கமைப்பில் இன்று வெள்ளிக்கிழமை (09/10/2020) அன்று மாலை 19h மணிக்கு நடைபெற உள்ளது.

இந்நிகழ்வில் அனைவரும் கலந்து கொண்டு இறந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்பதுடன், மேலும் விருப்பம் உள்ளவர்கள் பூங்கொத்துக்கள், படங்கள், உங்கள் மனக்குமுறல்களை எழுத்து வடிவில் எழுதுதல் என்பன அனுமதிக்கப்படும்.

அனைவரும் முக கவசம்( மாஸ்க்) அணிதல் கட்டாயம். பிரான்சு அரசாங்கத்தால் கூறப்பட்டுள்ள சுகாதார வழிமுறைகள் அனைத்தும் பின்பற்றப்பட வேண்டும்.

நிகழ்வு
வெள்ளிக்கிழமை 09/10/2020 மாலை 19h-22h
Primaire Henry Quatre Marie, 16 rue baudin 93130 Noisy-le-Sec
நன்றி.

தமிழ்ச்சங்கம்
நுவாசி லு செக்
தொடர்புக்கும்,
0033 695 670 779

Previous Post Next Post