யாழ்.சாவகச்சேரியில் பட்டப் பகலில் வீடு புகுந்து இளம் பெண் கடத்தல்!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
யாழ்ப்பாணம் சாவகச்சேரிப் பகுதியில் இளம் பெண் ஒருவர் இனந்தெரியாத நபர்களினால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. பட்டப் பகலில் வீடு புகுந்த இளைஞர் குழு ஒன்று 17 வயதுடைய இளம் பெண்ணைக் கடத்திச் சென்றுள்ளனர்.

சாவகச்சேரி சோலையம்மன் ஆலயத்துக்கு அருகில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த இளைஞர் குழு இளம் பெண்ணை இழுத்து வாகனத்தில் ஏற்றிச் சென்றுள்ளனர்.

அத்துடன் பெண்ணின் தாயாரின் வாகனத்தை மறிக்க முற்பட்டபோது அவர் மீது வாகனத்தை மோதி காயப்படுத்திச் சென்றுள்ளனர்.
Previous Post Next Post