வரலாற்றுச் சிறப்புமிக்க நயினை நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனாத் தொற்றுச் சூழ்நிலை காரணமாக இம் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஆலய அறங்காவலர் சபையினர் அறிவித்துள்ளனர்.
இம்மாதம் 10ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவிருந்த ஆலய வருடாந்த மகோற்சவத்தினை மட்டுப்படுத்தப்பட்ட அடியவர்களுடன் நடத்தவிருந்த நிலையில் இன்று காலை அவசரமாக கூடிய ஆலய அறங்காவலர் சபையினர் குறித்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளனர்.