கிளிநொச்சியில் நண்பர்களுக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம்! ஒருவர் அடித்துக் கொலை!! (படங்கள்)

கிளிநொச்சி சம்புக்குளம் பகுதியில் இரு நண்பர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக தடியால் தாக்கப்பட்டு ஓருவர் உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்மடுநகர் சம்புக்குளம் பகுதியில் நேற்றையதினம் (30) மாலை 4.30 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நண்பர்கள் இருவருக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில் தடியால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் நோயாளர் காவு வண்டிமூலம் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்றைய தினம் (01) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இராமையா இராமஜெயம் எனும் ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இறந்தவரின் சடலம் பிரேதபரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக தருமபுரம் பொலிசார் விசாரனைகளை ஆரம்பித்துள்ளனர்.

Previous Post Next Post