ஆயுதத்தை கீழே வைத்து விட்டுப் போராட்டத்தில் இணைந்த சிறப்பு அதிரடிப் படை வீரர்! (படங்கள்)

கொழும்பில் இடம்பெற்று வரும் ஆர்ப்பாட்டத்தில் ஆயுதங்களை கீழே போட்டு விட்டு இராணுவ அதிகாரி ஒருவரும் இணைந்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகக் கோரி நாட்டு மக்கள் பெருந்திரளாக ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோட்டாயவுக்கு பாதுகாப்பு வழங்கும் நோக்கில் நிலைநிறுத்தப்பட்டிருந்த சிறப்பு அதிரடி படையை சேர்ந்த இராணுவ சிப்பாய் ஒருவர் மக்கள் போராட்டத்தில் இணைந்துள்ளார்.

குறித்த இராணுவ சிப்பாய்க்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் கரகோஷம் செய்து இணைத்துக் கொண்டனர்.

ஏற்கனவே இன்று காலை பொலிஸ் அதிகாரி ஒருவர் மக்களுடன் இணைந்து கோட்டபாயவுக்கு எதிரான பேரணியில் இணைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post