காமுகர்களாக மாறும் யாழ்ப்பாணத் தாத்தாக்கள்! 16 வயதுச் சிறுமி துஷ்பிரயோகம்!! 72 வயது முதியவர் கைது!!!

யாழ்.சாவகச்சோி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 16 வயது சிறுமி ஒருவரை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 72 வயதான முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்றுவருவதாகவும் விசாரணைகளின் பின்பே பூரண தகவல்களை வெளிப்படுத்த முடியும் எனவும் பொலிஸார் தொிவித்துள்ளனர். 

யாழ்ப்பாணத்தில் அண்மைக் காலங்களில் முதியவர்களினால் சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாவது அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 
Previous Post Next Post