கிளிநொச்சியில் அடிகாயங்களுடன் குளத்திலிருந்து இளைஞனின் சடலம் மீட்பு! (படங்கள்)

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விநாயகபுரம் பகுதியிலுள்ள கந்தன்குளம் பகுதியில் இளைஞன் ஒருவரின் சடலம் அடி காயங்களுடன் இனங்காணப்பட்டதையடுத்து கிளிநொச்சி பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் முல்லைத்தீவு மல்லாவி ஐயங்கன் குளத்தைச் சேர்ந்த பகிரதன் சுமன் 21 வயதுடைய இளைஞரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நீதவானின் அனுமதியுடன் சடலத்தினை மீட்டு உடல் கூறு பரிசோதனைகளின் பின்னர் உறவினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை ,எடுக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை கிளிநொச்சி பொலிசார் முன்னேடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post