யாழில் வீடொன்றுக்கு முன்னால் கைவிடப்பட்ட நிலையில் நிற்கும் மோட்டார் சைக்கிளால் பரபரப்பு! (படங்கள்)

யாழ். வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி மேற்கு பகுதியில் வீடு ஒன்றிற்கு முன்னால் கைவிடப்பட்ட நிலையில் மோட்டார் சைக்கிள் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் இன்று (02.03.2023) பதிவாகியுள்ளது.

சாளி மோட்டார் சைக்கிள் ஒன்றின் பாகங்கள் கழற்றப்பட்ட நிலையில் வீடு ஒன்றிற்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த இடத்திற்கு அருகில் உள்ள வீட்டின் உரிமையாளர் காலை வீட்டிற்கு வெளியே வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தமை அவதானிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post