யாழில் ரயில் மோதி யாழ்.இந்துக் கல்லூரியின் முன்னாள் ஆசிரியர் உயிரிழப்பு!

யாழ் சுன்னாகத்தில் இன்று காலை ரயிலில் பாய்ந்து 80 வயதான முதியவர் உயிரிழந்துள்ளார். இவர் யாழ். இந்துக் கல்லுாரியின் ஓய்வு பெற்ற ஆசிரியராவார்.

சர்மா ஐயா என அனைவராலும் இவர் அழைக்கப்படுபவர். அந்தக் காலத்திலேயே கணனி மற்றும் தட்டெழுத்து போன்றவற்றில் மிகவும் தேர்ச்சி பெற்ற ஆசிரியராக இவர் விளங்கினார்.

முன்னாள் துறைத்தலைவர் சிரேஸ்ட விரிவுரையாளர் Dr. சிவசண்முகராஜா அவர்களின் சகோதரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post