யழில் மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழப்பு!

யாழ்.கொக்குவில் - குளப்பிட்டி பகுதியில் மின்சாரம் தாக்கி 17 வயதான மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.

கொக்குவில் இந்துக் கல்லூரியில் உயர்தரம் பயின்று வரும் கொக்குவில் குளப்பிட்டியைச் சேர்ந்த மோகனதாஸ் கிஷோத்மன் (17 வயது) என்ற மாணவனே உயிரிழந்துள்ளான்.

மின்னழுத்தியினை மின்பிறப்பாக்கியுடன் இணைக்க முற்பட்ட வேளை மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த மாணவனின் சடலம் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. குறித்த மாணவனுக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாமெனவும் சந்தேகிக்கப்படுகிறது.

உயிரிழப்பு தொடர்பில் கோப்பாய் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Previous Post Next Post