கிளிநொச்சியில் பாம்பு தீண்டி ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு!

கிளிநொச்சி தருமபுர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரமந்தனாறு பகுதியில் நேற்றையதினம்(15.08.2023) இரவு ஒரு வயதும் 7 மாதம் நிரம்பிய தனுஜன் ஜெஸ்மின் இன்னும் சிறுவன் படுத்துறங்கிய நிலையில் பாம்பு கடிக்கிலக்கானான்.

இந்நிலையில் உடனடியாக உறவினர்களால்சிறுவன் தருமபுர வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.

கிளிநொச்சி வைத்தியசாலையில் சிறுவனை கடித்த பாம்பினை கொண்டு வருமாறு கூறியதை அடுத்து, உறவினர்கள் சிறுவனை கடித்த பாம்பினை வைத்தியசாலைக்கு கொண்டு சென்று, அங்கிருந்து மேலே சிகிச்சைக்காக கொழும்பு பொறல்ல வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தபொழுது நேற்றைய தினம் 15.08.2023 மூன்று மணி அளவில் சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்துள்ளான்.

இச்சம்பவம் தொடர்பாக தருமபுர போல பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Previous Post Next Post