கிளிநொச்சியில் மாணவியைக் காணவில்லை! கண்டவர்கள் அறியத் தரவும்!! தந்தை கோரிக்கை!!!

கிளிநொச்சி விநாயகபுரத்திலிருந்து நகரத்தில் உள்ள தனியார் கல்வி நிலையத்துக்கு சென்ற மாணவி ஒருவர் கடந்த மாதம் 5-ம் திகதி முதல் காணாமல் போன நிலையில் குறித்த மாணவியை பெற்றோர் தேடி வருகின்றனர்.

கிளிநொச்சி விநாயகபுரத்தை சேர்ந்த கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தில் 2023 (கலை) உயர்தர பிரிவில் கல்வி பயின்று வந்த மாணவி ஒருவர் காணாமல் போயுள்ளதாக அவரின் தந்தை தெரிவித்துள்ளார்.

புவனேஸ்வரன் ஆர்த்தி என்ற குறித்த மாணவியே காணவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

பல்வேறு இடங்களில் ஒரு மாத காலமாக தேடியும் இவரை பற்றிய எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை.

எனவே இவரை பற்றிய தகவல் தெரிந்தவர்கள் அல்லது இவரை இலங்கையின் எப் பிரதேசத்திலாவது கண்டவர்கள் இருந்தால் உடனடியாக 0774941522 / 0772144553 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறிய தருமாறு தந்தை கோரிக்கை விடுத்துள்ளார்.
Previous Post Next Post