கிளிநொச்சியில் கசிப்பு காய்சியவர்களை துரத்திச் சென்ற பொலிஸ் அதிகாரி சடலமாக மீட்பு! (படங்கள்)

கிளிநொச்சியில் சட்டவிரோத செயற்பாட்டை கட்டுப்படுத்தும் வகையில் கடமையின் நிமித்தம் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மலையாளபுரம், புதுஐயங்கன்குளம் பகுதியில் சட்டவிரோத கசிப்பு காய்ச்சுபவர்களை கைது சென்ற போது, நேற்று (14) இவர் காணாமல் போயிருந்தார்.

கசிப்பு காய்ச்சும் தகவலறிந்து 3 பொலிசார் சென்றபோது, கசிப்பு காய்ச்சுபவர்கள் தப்பியோடினர். அவர்கள் குளத்துக்குள் இறங்கி தப்பியோட, பொலிஸ் உத்தியோகத்தர்களும் விரட்டிச் சென்றனர்.

சிறிது நேரத்தின் பின் 2 பொலிசார் திரும்பி வந்தபோதும், ஒருவர் திரும்பி வரவில்லை. நேற்று இரவு வரை இராணுவம், பொலிசார் அந்த பகுதியில் பெரும் தேடுதலில் ஈடுபட்டனர்.

பொலிஸ் உத்தியோகத்தர் நீரில் மூழ்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் இன்று தேடுதல் நடத்தப்பட்டது. இதில் நீரில் மூழ்கிய நிலையில் பொலிஸ் உத்தியோகத்தரின் சடலம் மீட்கப்பட்டது.

இச் சம்பவத்தில் பன்சலகொட வலஸ்முல்ல பகுதியைச் சேர்ந்த லியனகே சத்துரங்க என்வரே இறந்துள்ளார்.

சடலம் நீதவான் பார்வையிட்ட பின்னர் பிரேத பரிசோதனைகளை தொடர்ந்து உறவினர்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிசார் தெரிவிக்கின்றனர். சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.


Previous Post Next Post