யாழில் நள்ளிரவு பயங்கரம்! வீடு புகுந்து வன்முறைக் கும்பல் அட்டூழியம்!! (படங்கள்)

யாழ். தென்மராட்சி மீசாலை மேற்கு பகுதியிலுள்ள வீட்டின்மீது இனம்தெரியாத நபர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று நள்ளிரவு 12:00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

கதவை உடைத்து உள்ளே நுழைந்த இனந் தெரியாத குழுவினர் பொருட்களுக்கு தீயிட்டுள்ளனர்.

இதன்போது மோட்டார் சைக்கிள், தொலைக்காட்சி பெட்டி மற்றும் வீட்டு தளபாடங்கள் தீக்கிரியாக்கப்பட்டுள்ளன.

வீட்டில் தாய் மகள் போரப்பிள்ளைகள் என ஐவர் இருந்துள்ளனர்.

இதன்போது வீட்டில் இருந்தவர்களுக்கு எதுவித சேதங்களும் ஏற்படவில்லை. தீ பரவுவதை கண்ணுற்ற அயலர்கள் அவர்களை மீட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Previous Post Next Post