தமிழர்களை அச்சுறுத்தும் வகையில் சுவர்களில் சித்திரம்! (படங்கள்)

இளைஞர், யுவதிகளால் நாட்டின் வீதிகளில் உள்ள சுவர்களில் வர்ணம் பூசி, சித்திரம் வரைந்து அழகுபடுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இவ்வாறு வரையப்பட்ட ஓர் சித்திரம் பலரது கவனங்களையும் ஈர்த்துள்ளது. ஏனெனில் குறித்த சித்திரம் தமிழர்களை கழுத்தறுத்துக் கொலை செய்வேன் என சைகை மூலம் எச்சரித்த பிரித்தானிய தூதரக அதிகாரி பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவின் சைகைக்கு ஒத்ததாக வரையப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை பிரித்தானிய நீதிமன்றம் பொது ஒழுங்குச் சட்டத்தை மீறியதாகக் குறிப்பிட்டு அவருக்கு 2 ஆயிரத்து 500 ஸ்ரேலிங்க் பவுண்ட் தண்டம் விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.




Previous Post Next Post