பயங்கரவாதத் தாக்குதலில் காயமடைந்த யாழ்.யுவதி உயிரிழப்பு! (படங்கள்)

இலங்கையில் கடந்த உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கடந்த 9 மாதங்களாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிரின் ப்ளோரிடா (வயது-26) என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.

கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்தில் கடந்த வருடம் ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் இவர் படுகாயமடைந்திருந்தார்.

இந் நிலையிலேயே சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு அவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Previous Post Next Post