தமிழ்ப் பெண்ணிடம் ஆணுறுப்பைக் காட்டிய இராணுவச் சிப்பாய்க்கு நடந்த கதி!(படங்கள்)

தமிழ்ப் பெண்ணிடம் தனது ஆணுறுப்கைக் காட்டிய இராணுவச் சிப்பாயைப் பொதுமக்கள் நையப்புடைத்துள்ளனர். இச் சமபவம் வவுனியா நொச்சிமோட்டைப் பகுதியில் இன்று மதியம் இடம்பெற்றுள்ளது.

இதனால் நொச்சிமோட்டை பாலத்திற்கு முன்பாக சற்றுநேரம் பதட்டமான சூழல் ஏற்பட்டதுடன், அங்கு கூடியவர்களால் குறித்த நபர் தாக்கப்பட்டார்.

இச் சம்பவம் தெடார்பில் பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் பெண் கருத்துத் தெரிவிக்கையில்,

குறித்த நபர் தனது வீட்டிற்கு முன்பாக வந்து சிறு நீர் கழித்ததுடன்இ தனது ஆண் உறுப்பை காட்டி தன்னை அழைத்ததாகவும் தெரிவித்தார்.

பின்னர் தான் இன்னுமொருவருடன் சேர்ந்து குறித்த நபரை நோக்கி சென்ற போது அவர் ஓடியுள்ளார். பின்னர் எமது உறவினர்கள் ஒன்று கூடி அவரிடம் விசாரித்த போது தான் இராணுவம் என்று தெரிவித்தார்.

இது தொடர்பில் தாம்  பொலிசாருக்கு தகவல் வழங்கியதாக பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு சென்ற ஓமந்தை பொலிசார் குறித்த நபரை முச்சக்கரவண்டி ஒன்றில் ஏற்றி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

தான் இராணுவ முகாம் ஒன்றில் பணியாற்றுவதாகவும் வேறு அலுவல் நிமித்தமே அப்பகுதிக்கு சென்றதாகவும் குறித்த நபர் தெரவித்திருந்தமை குறிப்பிடதக்கது.



Previous Post Next Post