யாழில் ரயில் வரும்போது கடவையைக் கடந்தவருக்கு நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பு!

புகையிரதக் கடவையின் தன்னியங்க்க சமிஞ்ஞை எச்சரிக்கையை மீறி கடவையைக் கடந்த இளைஞனுக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது சாவகச்சேரி நீதிமன்றம்.

புகையிரதக் கடவையின் எச்சரிக்கையை மீறிப் பயணித்த குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவரை இன்று சாவகச்சேரி நீதிமின்றில் பொலிஸார் முற்படுத்தினர்.

குறித்த வழக்கை விசாரித்த நீதவான், புகையிரதக் கடவையின் எச்சரிக்கை சமிஞ்ஞையை மீறிப் பயணித்ததை இளைஞன் ஒப்புக் கொண்டதையடுத்து 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

இதேவேளை மதுபோதையில் வாகனம் செலுத்திய இருவருக்கும் தலா 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் 3 மாத காலத்திற்கு சாரதி அனுமதிப் பத்திரம் இரத்துச் செய்து தீர்ப்பளித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

Previous Post Next Post