இரு தினங்களுக்கு முன் திருமணம் செய்த பெண் விபத்தில் உயிரிழப்பு! (படங்கள்)

இரு தினங்களுக்கு முன் திருமணம் நடந்த நிலையில் இன்று இடம்பெற்ற விபத்தொன்றில் மணப் பெண் உயிரிழந்துள்ளார்.

வவுனியா முருகனூர் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்திலேயே குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.

விபத்துத் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

குறித்த பெண்ணும் அவரது கணவரும் முருகனூர் பகுதியில் அமைந்துள்ள தமது வீட்டிலிருந்து சிதம்பரபுரம் நோக்கி முச்சக்கரவண்டியில் பயணித்துள்ளனா்.

இதன்போது கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கர வண்டி அருகில் இருந்த மதிலுடன் மோதியதில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்த கணவன் மற்றும் மனைவி  இருவரும் நேயாளா் காவு வண்டி மூலம் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டனர்.

எனினும் சிகிச்சை பலனின்றி மனைவி உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகி்றது.

குறித்த சம்பவத்தில் வவுனியா முருகனூரை சேர்ந்த தர்சினி (வயது -25) என்ற பெண்ணே உயிரிழந்தவா் ஆவாா். கணவரான கலைச்செல்வன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இவர்கள் இருவருக்கும் கடந்த இரு தினங்களுக்கு முன்னரே திருமணம் நடந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து தொடர்பாக சிதம்பரபுரம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post Next Post