யாழில் விசாரணைக்காகச் சென்ற பொலிஸார் மீது இனந்தெரியாதோர் தாக்குதல்!

யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கோப்பாய் குப்பிழாவத்தை என்ற இடத்தில் விசாரணைக்காக சென்ற பொலிஸார் மீது இளைஞர் குழு ஒன்று தாக்குதல் நடத்தியிருப்பதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

இன்று இரவு குறித்த சம்பவம் இடம்பெற்றதாக தெரியவருகிறது.

பொலிஸாரின் சிறுகுற்றப்பிரிவு அதிகாரி ஒருவரும் அவருடன் சென்ற பொலிஸார் இருவருமே தாக்குதலுக்கு இலக்காகியிருக்கின்றனர்.

தாக்குதல் நடத்தியவர்கள் இனந்தெரியாத நபர்கள் என்று பொலிஸார் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.
Previous Post Next Post