நீக்குவதாக அறிவித்த ஊரடங்கை திடீரென மீண்டும் அமுல்படுத்தியது அரசு!

கோரோனா வைரஸ் தொற்றுள்ள அபாய வலயங்களான கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டங்களில் நடைமுறையில் இருக்கும் ஊரடங்குச் சட்டம் வரும் மே 4ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 5 மணிக்குவரை நீடிக்கப்படுல் என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களுக்கு பிரவேசிப்பது மற்றும் அங்கிருந்து வெளியேறிச் செல்வது அனைவருக்கும் முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது.

முன்னதாக இந்த மாவட்டங்களில் நாளை மறுதினம் திங்கட்கிழமை அதிகாலை 5 மணிக்கு ஊரடங்கு நீக்கப்படும் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post