முன்பள்ளிகள், சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் மீள ஆரம்பிக்க அனுமதி!

சுகாதார அமைச்சு வழங்கியுள்ள ஆலோசனைகள் மற்றும் வரையறைகளுக்கு உட்பட்டு முன்பள்ளிகள் மற்றும் சிறுவர் பகல் பராமரிப்பு நிலையங்களை எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி தொடக்கம் மீண்டும் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை பெண்கள் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.

சுகாதார அமைச்சின் ஆலோசனையின் பிரகாரம் பாடசாலைகள் வரும் ஜூன் 29ஆம் திகதி தொடக்கம் 5 கட்டங்களாக மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.

அத்துடன், தனியார் கல்வி நிலையங்களை மீள ஆரம்பிக்கவும் ஜூன் 29ஆம் திகதி தொடக்கம் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post