இத்தாலியில் சட்டவிரோதமாகக் குடியேறியுள்ள இலங்கையர்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்!

இத்தாலியில் வாழும் சட்டவிரோத குடியேறிகள் 6 லட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு வதிவிட அனுமதி வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இத்தாலி உள்விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஜுன் மாதம் முதலாம் திகதி அமுல்படுத்தப்படும் பொது மன்னிப்பு காலத்தில் புதிய சட்டம் மூலம் இந்த வதிவிட அனுமதி வழங்கப்படவுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

8 வருடங்களின் பின்னர் செயற்படுத்தப்படும் இந்த பொது மன்னிப்பு கால சட்டம் மூலம்இ விவசாயம், மீன்பிடி, வீட்டு பணி சேவை மற்றும் மேலும் சில பிரிவுகளின் ஊழியர்களுக்கு சேவை யோசனை ஊடாக தொழில் ஒப்பந்த செய்துக் கொள்வதன் மூலம் இந்த வதிவிட அனுமதி கிடைக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

ஜுன் மாதம் முதலாம் திகதி முதல் ஜுலை மாதம் 15ஆம் திகதி வரையிலான 45 நாட்களுக்குள் இந்த வதிவிட அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என இத்தாலி உள்விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இத்தாலியில் முன்னெடுக்கவுள்ள இந்த நடவடிக்கையின் கீழ் அந்த நாட்டில் வதிவிட அனுமதியின்றி வசிக்கும் இலங்கையர்கள் 15 ஆயிரம் பேருக்கு வதிவிட அனுமதி கிடைக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

இத்தாலியில் உள்ள சட்டவிரோத இலங்கையர்களுக்கு புதிய விமான அனுமதி பத்திரம் பெறுவதற்காக இத்தாலி நகரத்தில் உள்ள இலங்கை தூரகம் மற்றும் மிலான் நகர உயர் ஸ்தானிகரலாயத்தில் வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த விமான அனுமதி பத்திரம் பெற்றுக் கொள்வதற்கு அவசிய ஆலோசனைகளை தூதரக இணையத்தில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இத்தாலியின் பணியாற்றும் இலங்கை தூதுவர் சிசிர சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

நிலவும் நிலைமைக்கமைய விமான அனுமதி பத்திரம் விண்ணப்பிக்கும் போது ஜுன் மாதம் 30ஆம் திகதிக்கு முன்னரான தினம் மற்றும் நேரத்தை ஒதுக்கிக் கொள்வதற்கு அவசியமான ஆவணங்களை தூதரக அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.

ஆவணங்களை ஒப்படைத்த நாள் முதல் குறைந்தது 10 நாட்களுக்குள் வதிவிட அனுமதி விண்ணப்பித்தவர்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தூதரக அலுவலகம் தெரிவித்துள்ளது.
Previous Post Next Post