யாழில் மனைவியை தீ வைத்துக் கொளுத்திய கணவன்! மனைவி உயிரிழப்பு!!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
குடும்பத் தகராறு காரணமாக கணவனால் தீ வைக்கப்பட்ட இளம் குடும்பப் பெண் 27 நாள்களின் பின் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.

அவரது உயிரிழப்பைத் தொடர்ந்து காணவன் இன்று காலை நெல்லியடிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவத்தில் அல்வாய் வடக்கைச் சேர்ந்த ரூபிகா (வயது-22) என்ற இளம் குடும்பப் பெண்ணே உயிரிழந்துள்ளார்.

இளம் குடும்பப் பெண் ஒருவர் கடந்த 4ஆம் திகதி எரிகாயங்களுடன் மந்திகை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு குடும்பத் தகராறு காரணமாக கணவர் தீ மூட்டினார் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் 27 நாள்களின் பின்னர் அவர் சிகிச்சை பயனின்றி இன்று காலை உயிரிழந்தார்.

அவரது உயிரிழப்பையடுத்து பிணையில் விடுவிக்கப்பட்ட கணவர் இன்று காலை நெல்லியடிப் பொலிஸாரால் மீளவும் கைது செய்யப்பட்டார்.

இளம் குடும்பப் பெண்ணில் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக மந்திகை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. நாளை உடற்கூற்றுப் பரிசோதனை இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டது.
Previous Post Next Post