ஜனாதிபதி திடீரென நுழைந்த அலுவலக அதிகாரிகளுக்கு நடந்த கதி!



எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
நாரஹேன்பிட்டியில் உள்ள வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் அலுவலகத்தின் சொத்துக்கள் பிரிவு முகாமையாளர் மற்றும் கொழும்பு மாவட்ட முகாமையாளர் ஆகியோர் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாரஹேன்பிட்டியிலுள்ள வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் அலுவலகத்திற்கு அண்மையில் திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

இதன்போது அங்கு சேவையை பெற்றுக்கொள்ள வந்திருந்தவர்கள் ஜனாதிபதியிடம் தமது முறைப்பாடுகளை முன்வைத்திருந்தனர்.

ஜனாதிபதியின் வருகையை அடுத்து குறித்த அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி நடவடிக்கைகளால் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

அந்த அதிகார சபையின் கணக்கீட்டு பிரிவின் விசாரணை குழுவினால் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளுக்கமைய இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post