லண்டனில் பரிதாபமாக உயிரிழந்த இலங்கைத் தமிழ்ச் சிறுவன்!



எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
வவுனியா கோவில்குஞ்சுக்குளத்தை பூர்வீகமாக கொண்டு லண்டனில் வசித்து வரும் சிறுவன் ஒருவன் விபத்தில் உயிரிழந்துள்ளான்.

குறித்த சிறுவன் ஐக்கிய இராச்சியத்தின் கேய்ஸ் (Hayes) பகுதியில் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளான். இந்நிலையில் நேற்று (11) இரவு 7 மணியளவில் தனது தாயுடன் நகர்ப்பகுதிக்கு சென்ற சிறுவன் பாதசாரி கடவையை கடக்க முற்பட்ட போது வேகமாக வந்த கார் மோதியுள்ளது.

இதனால் படுகாயமடைந்த சிறுவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளான்.

குறித்த சம்பவத்தில் வவுனியா பாலமோட்டை கோவில்குஞ்சுக்குளம் பகுதியை பூர்வீகமாக கொண்ட சசிகரன் அகர்வின் வயது 4 என்ற சிறுவனே மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post