கிளிநொச்சியில் முதலாவது கோவிட் -19 நோயாளி அடையாளம்!



எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
கிளிநொச்சி மாவட்டத்தில் முதலாவது கோவிட் -19 நோயாளி அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி கண்டாவளை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் தரும்புரம் மூன்றாம் யுனிட்டைச் சேர்ந்த ஒருவருக்கு கோரோனா வைரஸ் உள்ளமை இன்று இரவு கண்டறியப்பட்டுள்ளது.

கொழும்பு கொட்டாஞ்சேனையில் இயங்கும் மயூரா உணவகத்தில் பணியாற்றும் பணியாளருக்கே கோரோனா தோற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவரது உணவகத்தின் உரிமையாளருக்கு கோரோனா தோற்று உள்ளமை கடந்த வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்ட நிலையில் அங்கு பணியாற்றி ஊழியருக்கு நடத்தப்பட்ட பிசிஆர் பரிசோதனையிலேயே கோவிட் -19 தொற்று நோய் உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 28ஆம் திகதி கிளிநொச்சி திரும்பிய அவர், சுய தனிமைப்படுத்தப்பட்டு பிசிஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டார்.

கண்டாவளை சுகாதார மருத்துவ அதிகாரியின் சாதூரியமான செயற்பாட்டால் கோரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவரது உறவினர் ஒருவர் பிரதேச செயலகத்தில் பணியாற்றும் நிலையில் அவர் கடந்த மூன்று தினங்களாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post