வடக்கில் முதலாவது கொரோனா நோயாளி உயிரிழப்பு!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
வவுனியா உளுக்குளத்தைச் சேர்ந்த 60 வயதுடைய பெண்ணே அநுராதபுரம் வைத்தியசாலை கோவிட் -19 சிகிச்சை நிலையத்தில் உயிரிழந்துள்ளார் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

வவுனியா வைத்தியசாலை பெண் நோயியல் சத்திரச்சிகிச்சைக்கு உள்படுத்தப்பட்ட அவர், அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியமை கண்டறியப்பட்டது.

அதனால் அவர் அநுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பபட்ட நிலையில் அங்கு இன்று சனிக்கிழமை இரவு மாலை உயிரிழந்துள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அவரது உயிரிழப்புக்கு சத்திரசிகிச்சைக்கு பின் ஏற்பட்ட கோவிட் -19 நோய்த் தொற்றுக் காரணம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post